பணம், நகைக்காக பாட்டி உட்பட 10 பேர் கொலை; ‘சயனைடு சிவா’வின் கைவரிசை

கேரளாவில் உணவில் ‘சயனைடு’ விஷம் கலந்து உறவினர்கள் அறுவரைக் கொன்ற ஜோலி எனும் பெண்ணைப்போல ஆந்திரப் பிரதேசத்தில் ‘சயனைடு’ விஷம் வைத்து 10 பேரை சிவா என்பவர் கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் இந்தக் கொலைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

தமது சொந்த பாட்டி, அண்ணி உட்பட மூன்று பெண்கள் 20 மாதங்களுக்குள் கொலையுண்ட 10 பேரில் அடக்கம்.

பூசைகள் செய்து பணம், நகை போன்றவற்றை பெருக்கிக் கொடுப்பதாக ஏமாற்றி பணம், நகை போன்றவற்றைப் பெற்றுக்கொண்டு, தனிமையான இடத்தில் ஏதாவது ஒரு பூசையைச் செய்து, பிரசாதத்துடன் சயனைடு விஷம் கலந்து கொடுத்து ஆட்களை சிவா கொன்றது தெரியவந்துள்ளது.

இவ்வாறாகக் கொலையுண்ட 10 பேரிடமிருந்து ரூ.24 லட்சம் ரொக்கம், சுமார் 35 சவரன் தங்க நகை போன்றவற்றை சிவா ஏமாற்றிப் பறித்ததும் அம்பலமாகியுள்ளது.

சிவாவுக்கு சயனைடு அளித்து உதவிய ஷேக் அமீனுல்லா பாபுவையும் போலிசார் கைது செய்துள்ளனர். பாபுவின் இளைய சகோதரர் ஆசாத்தின் நிக்கல் பூச்சி ஆலையில் பயன்படுத்தப்படும் சயனைடை ஆசாத்துக்குத் தெரியாமல் சிவாவுக்கு பாபு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!