குஜராத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர பதியார் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்றுள்ளார்.
சத்தம் வீட்டின் குளியலறையில் இருந்து வருவதை உணர்ந்த அவர் குளியலறையின் கதவை திறந்து பார்த்தபோது அங்கே கறுப்பு நிற உருவத்தில் நான்கரை அடி நீளமுள்ள முதலை ஓன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மகேந்திர பதியார் வீட்டிற்கு வந்த மீட்புக் குழுவினர், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி அந்த முதலையை மீட்டனர்.
முதலை வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் இருந்து வந்திருக்கலாம் என்று அங்கு வசிப்பவர்கள் கூறினர்.