புதுடெல்லி: அந்தமான் அருகே ‘புல்புல்’ தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் அரபிக் கடலில் அடுத்தடுத்து ‘கியார்’, ‘மகா’ புயல்கள் உருவாகின. இதையடுத்து இப்போது வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டு உள்ளது. மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் இந்த ‘புல்புல்’ புயல்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.