காவி நிறம் பூசப்பட்ட கழிவறையை கோயில் என நினைத்து வழிபாடு

உத்தரப் பிரதேசத்தில் காவி நிறம் பூசப்பட்ட கழிவறையை, கோயில் எனக்கருதி பொதுமக்கள் வணங்கிச் சென்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள மாவ்தஹா பகுதியில் அரசு சார்பில் கழிவறை கட்டப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாக அது பயன்பாட்டில் இல்லை. அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், கழிவறைக்கு சாயம் பூச முடிவுசெய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அந்தக் கழிவறைக்கு காவி நிறம் பூசப்பட்டது.

அதனையடுத்து, காவி நிறம் பூசப்பட்ட கழிவறைப் பகுதியைக் கடந்து சென்றவர்கள், வாசலில் நின்று வணங்கிச் செல்லத் தொடங்கினர். சிலர் ஒருபடிக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த கழிவறை வளாகத்தின் வெளியே வழிபாடும் நடத்தியுள்ளனர்.

தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், காவி நிறத்தில் இருந்த கழிவறைக்கு ‘இள்ஞ்சிவப்பு’ நிறம் பூசியது. அதற்குப் பிறகுதான் பொதுமக்களுக்கு அது கோயில் இல்லை, கழிவறை என்பது தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!