நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் பல இடங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி பெண்களை ஏமாற்றி ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கோவூரைச் சேர்ந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் 6 பெண்கள் உட்பட 14 பேரை போலிசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஏழு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆடம்பர கார், கைபேசிகள், 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.