ஹைதராபாத்: இந்தியாவின் ஒரே உருது பல்கலைக் கழகமான ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் தேசிய உருதுப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும பேராசிரியர்களுக்கே உருது மொழி தெரியவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 40 விழுக்காடு பேராசிரியர்களால் உருது மொழியில் பாடங்களை நடத்த முடியவில்லை என்றும், இதனால் முக்கிய பாடங்களை ஆங்கில பாட நூல்களைக் கொண்டே கற்றுத் தருவதாகவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அடிப்படை உருது மொழியைக் கற்பதற்கென 6 மாத சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது அப்பல்கலைக்கழகம். இதன்மூலம் மாணவர்கள் மட்டுமல்லாது அப்பல்கலையின் பேராசிரியர்களும் பலன டைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.