புதுடெல்லி: கீழடியை அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரஹலா சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கீழடி அருகில் மாநில அரசு அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.