ஹைதராபாத்: இந்திய பொருளாதாரத்தில் 5 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். இந்த புள்ளிவிவரம் எங்கிருந்து கிடைத்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்தியா தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகவே இருக்கிறது. 2025ஆம் ஆண்டில் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதார நாடாக இருக்கும். பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவே அரசு பெரிய அளவில் சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது,” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மேலும் கூறினார்.