ரயில் பயணிக்கு பிரசவம் பார்த்த 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'

கர்ப்பிணி ஒருவர் அதிகாலை வேளையில் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனிருந்த சக பயணிகள், மும்பை ரயில் நிலையங்களில் பயணிகளுக்காகச் செயல்படும் 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'வுக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, பன்வேல் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் அங்கிருந்த மருத்துவ அறையில் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். குழந்தையை நலமாக ஈன்றெடுத்தார் அந்தப் பெண்.

பின்னர், தாயும், சேயும் பன்வேல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு துரிதமாக செயல்பட்டு சிகிச்சை பார்த்த மருத்துவ குழுவினரை மகாராஷ்டிரா அரசு வெகுவாக பாராட்டியுள்ளது.

இதுபோல கடந்த மாதமும் 29 வயதான இளம்பெண்ணுக்கு இக்குழுவின் மூலம் ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. மும்பை வழித்தடத்தில் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நல குறைவு முதல் பிரசவ வலி வரையிலான அனைத்து விதமான அவசர சிகிச்சையும் செய்து வருகிறது 24 மணி நேரமும் செயல்படும் இந்தக் குழு.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!