புதுடெல்லி: தனியார் உணவுப்பொருள் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் தவறான முன்னுதாரணங்களைப் பரப்பினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இயற்கை உணவுகளைக் கெடுதல் என்று கூறி துரித உணவுகளை நியாயப்படுத்தும் விளம்பரங்களும் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள இந்திய உணவு பாதுகாப்புத் துறை, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாடுமுழுவதும் கொண்டு செல்ல அரசு முயற்சித்து வரும் வேளையில் தனியார் நிறுவனங்கள் தவறான முன்னுதா ரணங்களைக் கொண்டு விளம்பரம் செய்துவருகின்றன எனவும் தவறான முன்னுதாரணங்களை விளம்பரப் படுத்துவோருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.