காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் சிறப்புப் படை வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு புதிதாக ஏற்படுத்திய ஆயுதப்படைகள் சிறப்பு நடவடிக்கை பிரிவின் கீழ் இந்திய ராணுவத்தின் ராணுவப் பிரிவு, இந்திய கடற்படையின் அதிரடிப்படைப் பிரிவு, இந்திய விமானப் படையின் கருடா பாதுகாப்புப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு இணைந்து செயல்படுவது, அவசர காலங்களில் முப்படைகளும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவக்கூடிய பயிற்சியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சிறப்பு படையின் முதல் தலைவராக மேஜர் ஜெனரல் அசோக் திங்க்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.