ஆந்திராவில் அரசாங்க ஊழியர்கள், அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி சேவையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜெகமோகன் ரெட்டி அதிரடி உத்தரவுகளையும், திட்டங்களையும் பிறப்பித்து வருகிறார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, மதுபான கடைகள் குறைப்பு, புதிய அரசு பணி நியமனம் போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அவர் தேர்தல் பிரசாரத்தின் போது லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார். இதற்காக குடிமக்கள் உதவி மையம் என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக புகார் செய்ய 14400 என்ற இலவச தொலைபேசி எண்ணுடன் மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.