நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் குஜராத் போலிசார் சோதனை

பெங்களூரு: சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர் நித்தியானந்தா சாமியார். இவர் பெங்களூருவை அடுத்த ராமநகர் மாவட்டம் பகுதியில் பரமஹம்ச நித்தியானந்த தியானபீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜனார்த்தன சர்மா என்பவர் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது. போலிசாரிடம் சிக்குவதைத் தவிர்க்க அவர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் குஜராத் போலிசார் சனிக்கிழமை ராமநகர் மாவட்டத்தில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

நித்தியானந்தா சாமியார் குறித்து ஆசிரமத்தில் உள்ள அவருடைய சீடர்களிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. நித்தியானந்தா மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு புகார் கொடுத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!