பேராயர் முலக்கல் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தது

மும்பை :ஜலந்தரின் முன்னாள் பேராயர் பிராங்கோ முலக்கல் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு இன்று காலை கேரளாவின் கோட்டயத்தில் தொடங்கியது.

கன்னியாஸ்திரி ஒருவரை 2014ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நீதி கோரி ஐந்து கன்னியாஸ்திரிகள் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போராட்டம் நடத்தியபோது இதுபற்றிய செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பேராயர் முலக்கல் கைது செய்யப்பட்டார். மூன்று வாரங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபனமானால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

தான் நிரபராதி எனக் கூறிவரும் முலக்கல், தனது பதவியிலிருந்து விலகினார். தன்மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் ஜோடிக்கப்பட்டவை என்றும் அவர் கூறி வருகிறார்.

அந்தக் கன்னியாஸ்திரிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அவரைப் பதவியிலிருந்து விலக்கியதற்காகத் தன்னைப் பழிவாங்குகிறார் என்றும் பேராயர் குற்றம் சாட்டுகிறார்.

காலைநேரப் பிரார்த்தனைக்குப் பிறகு பேராயரின் ஆதரவாளர்கள் அவருடன் நீதிமன்றத்திற்குத் துணையாகச் சென்றனர். ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் அடுத்த விசாரணை வரை அவரது பிணையை நீதிமன்றம் நீட்டித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!