மாநிலங்களவைக்கு வராத உறுப்பினர்கள்: துணை அதிபர் வெங்கையா கடும் அதிருப்தி

புதுடெல்லி: மாநிலங்களவையில் கேள்வி எழுப்பும் உறுப்பினர்கள், அவற்றுக்கான பதில்களைப் பெறுவதற்கு கண்டிப்பாக அவைக்கு வர வேண்டும் என துணை அதிபர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது அவைக்கு வராத உறுப்பினா்களின் பெயா்களை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் முக்கிய கேள்விகளை எழுப்பிய உறுப்பினர்கள் சிலர், அவற்றுக்கான பதிலைப் பெற கடந்த திங்கட்கிழமை அவைக்கு வரவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று உறுப்பினா்கள் அவைக்கு வராதது தீவிரமான விவகாரம் என்றார்.

“அவையில் இன்று 15 முக்கியமான கேள்விகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை எழுப்பிய உறுப்பினா்கள் அவைக்கு வருகை தரவில்லை.

“கேள்விகளை எழுப்பிய பிறகு, அதற்கு பதில் பெற வேண்டிய நிலையில் அவா்கள் அவையில் இல்லை. இத்தகைய நிகழ்வு மீண்டும் ஏற்பட்டதற்காக கவலைப்படுகிறேன்,” என்றார் வெங்கையா நாயுடு.

கேள்வி எழுப்பியிருந்த ஏழு உறுப்பினா்களும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஆவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!