நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் துப்பாக்கி யால் சுட்டுக்கொண்டு ஆறு பேர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலைத் தெரிவித்த நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் மோஹித் கார்க், மோதலுக்கான காரணம் என்ன என்பதைக் குறிப்பிடவில்லை.