பெங்களூரு: கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேர் தங்கள் பதவியைக் கைவிட்டனர். பதவி விலகல் கடிதங்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதன் காரணமாக மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் இன்று நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று வாக்களிப்பு நடக்கிறது.