புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க சென்றிருந்தார் ரயில்வே மற்றும் வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல். ஆனால் நாடாளுமன்றத்தை அடைவதற்குச் சற்றுத் தாமதம் ஆனது.
மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கும்போது உள்ளே இருக்கவேண்டும் என்பதால் நாடாளுமன்றத்திற்குள் அவர் வேகமாக ஓடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அவரது கடமை உணர்வுக்குத் தலைவணங்குவதாகப் பலரும் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை குறைந்தது குறித்து பிரதமர் மோடி அதிருப்தியடைந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.