நடனத்தை நிறுத்திய பெண்மீது துப்பாக்கிச்சூடு

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ராகூட் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தின்போது மேடையில் நடனம் ஆடிய ஒரு பெண் தொடர்ந்து ஆடாமல் நின்றதை அடுத்து அவரின் முகத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

தாடையில் குண்டடிபட்ட அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது.

இரண்டு பெண்கள் ஆடுவதும் ஒருவர் ஆடாமல் நின்றபோது அவரை ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் காணொளியில் தெரிந்தது.

இந்தச் சம்பவம் டிசம்பர் 1ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் கிராமத் தலைவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக போலிஸ் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

விரைவில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரைக் கைது செய்வோம் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!