பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து நாளை மாலைக்குள் விவரம் தெரிவிக்க வேண்டுமென பெங்களூரு உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நித்தியானந்தா மீதான பாலியல் பலாத்காரவழக்கு பெங்களூரு அமர்வு நீதி மன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.