தேசப்பற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டு மகாகவி பாரதியார்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: மகாகவி பாரதியார் நீதி, சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பாரதியாரை நினைவு கூரும் விதமாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்வதாக அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் எழுச்சியூட்டும் விதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார் மகாகவி பாரதியார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரம் அளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது,” என்றும் பிரதமர் மோடி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!