மாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை

பெற்றோர் மட்டுமல்லாமல் இனி மாமனார், மாமியாரையும் சரியாகக் கவனிக்காதவர்களுக்குச் சிறைத்தண்டனை காத்திருக்கிறது. இதுதொடர்பான மசோதா ஒன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களை முறையாகப் பராமரிப்பது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் மாமனார், மாமியாருக்கும் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பழைய மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி மாமனார், மாமியாரைச் சரியாகக் கவனிக்காத மருமகனுக்கும் மருமகளுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் இந்தச் சட்டத்திருத்த மசோதா தாக்கலானது. அதன்படி மாமனார், மாமியாருக்கான பராமரிப்புச் செலவு உச்சவரம்பு பத்தாயிரம் ரூபாய் என்பது நீக்கப்பட்டுள்ளது.

இனி அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் அதிக தொகையை கொடுக்க வேண்டி இருக்கும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!