மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஷீரடி நகரில் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது.
இங்கு சென்ற தமது மனைவி மாயமாகிவிட்டார் என்றும் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் மனோஜ்குமார் என்பவர் மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் டி.வி.நலவாடே, எஸ்.எம்.கவானி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
“கடந்த ஆண்டு ஷீரடியில் 88 பேர் காணாமல்போய்விட்டனர். பெரும்பான்மையானோர் சாய்பாபா கோவிலுக்கு வந்தவர்கள். அவர்களில் மிகச்சிலரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஷீரடியில் ஆள்கடத்தல் அல்லது மாற்று உறுப்புக்காக கடத்தல் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
“அகமது நகர் காவல் துறை அதிகாரி தனிப்படை அமைத்து தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.