நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லியில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திகார் சிறைச்சாலைக்கு வெளியே ஒன்று கூடிய பெண்கள் நிர்பயா குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். யோகிதா பயானா என்ற பெண் கூறுகையில், “தூக்குத் தண்டனை நிறைவேற்ற ஆள் கிடைக்காவிட்டால் இங்கிருக்கும் பெண்கள் அப்பணியைச் செய்யத் தயாராக உள்ளோம். நான்கு குற்றவாளிகளும் இந்த வாரத்திற்குள் தூக்கில் தொங்கவேண்டும்,” என்றார்.