பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 17 நாட்களில் தண்டனை

ஜெய்ப்பூர்: 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்திய குற்றவாளிக்கு 17 நாட்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் தயாராம் மேக்வால். 21 வயதான இவர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி 4 வயதே ஆன சிறுமியைச் சீரழித்துள்ளார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த போலிசார் துரிதகதியில் விசாரணை மேற்கொண்டு தயாராமை மறுதினமே கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவானது.

டிசம்பர் 7ஆம் தேதி போலிசார் சுரு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாராமுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதன்மூலம் குற்றம் புரிந்த 17 நாட்களில் குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்துள்ளது.

“போலிஸ் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டதால் இந்த வழக்கு மிக விரைவில் முடிவுக்கு வந்துள்ளது. அறிவியல் பூர்வ ஆதாரங்களும், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலமும் வழக்கு விசாரணையில் முக்கியப் பங்கு வகித்தன.

“மேலும் நீதிமன்றமும் நாள்தோறும் இந்த வழக்கு விசாரணையை நடத்தியது,” என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். தேஜஸ்வனி கௌதம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும், குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!