புதுடெல்லி: இந்தியா-சீனா இடையேயான எல்லைத் தகராறுக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு உயர்நிலைக் குழுக்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தின.
இதற்காக சிறப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் 21ஆவது கூட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக 22ஆவது கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடந்தது.
அதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழுவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்தியா-சீன இடையே, 3, 488 கிலோமீட்டர் நீள எல்லைக் கோடு தொடர்பாக சர்ச்சைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரும் பல பிரச்சினைகளை நேற்று விவா தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.