தாயைத் தவிக்கவிட்டு நடிகையைப் பார்க்கச் சென்ற மகன்

திருவனந்தபுரம்: நடிகையைப் பார்ப்பதற்காக பெற்ற தாயை ஒருவர் பாதியில் தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டார்.

கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் விளவூர்க்கல் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், சாரதா என்ற தன் தாய்க்கு ஓய்வூதியம் வாங்கி வருவதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஓர் அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு காத்திருந்தபோது அருகில் நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகச் செய்தி கேள்விப்பட்டு அந்த ஆடவர் நடிகையைப் பார்க்க ஓடி விட்டார். அவருடைய தாய் வீட்டுக்குப்போக வழி தெரியாமல் சாலையில் நின்று அழுதுகொண்டிருந்தார்.

அதைப் பார்த்த சிலர் போலிசுக்குத் தகவல் தெரிவித்தனர். தாயிட மிருந்து மகனின் கைபேசி எண்ணை வாங்கி அந்த ஆடவருடன் போலிசார் தொடர்புகொண்டதை அடுத்து போலிஸ் நிலையம் சென்று தாயை மகன் அழைத்துச் சென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!