புதுடெல்லி: நாடு முழுவதும் ரொக்கக் கழிவு அட்டை (டெபிட் கார்டு) எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 100 கோடிப் பேர் ரொக்கக் கழிவு அட்டைகளை வைத்திருந்தனர். இந்நிலையில் இவ்வாண்டு அக்டோபர் மாத கணக்கெடுப்புப்படி இந்த அட்டையின் பயன்பாடு 15 விழுக்காடு வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி 84 கோடியே 30 லட்சம் ரொக்கக் கழிவு அட்டைகள்தான் புழக்கத்தில் உள்ளன.
மின் காந்த பட்டை அடங்கிய ரொக்கக் கழிவு அட்டைகளை முற்றிலுமாக ஒழித்து, ‘சிப்’ எனப்படும் கணினி வில்லை பொருத்தப்பட்ட ரொக்கக் கழிவு அட்டைகளை மட்டுமே பயன்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நடவடிக்கையினால் 15 கோடியே 50 லட்சம் போலி அட்டைகள் மாயமாகிவிட்டன.
இளைஞர்கள் அடிக்கடி வேலை மாறுவதால் சம்பளத்திற்காக அவர்கள் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகள் வேறு வேலைக்குச் சென்ற பின்னர் பயன்படுத்தப்படாமல் செயல் இழக்கின்றன. இவ்வாறு செயலற்ற வங்கிக் கணக்குகளை முடக்கியதன் காரணமாகவும் நாட்டில் ரொக்கக் கழிவு அட்டைகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘டெபிட் கார்டு’ எண்ணிக்கை சரிவு
25 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Dec 2019 09:57

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!