அடுத்த அதிரடி: தேசிய மக்கள்தொகை பதிவேட்டை விரிவுபடுத்த ஒப்புதல்

புதுடெல்லி: என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு குடிமகன் குறித்த முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படும். இதற்கான கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கான செலவுத் தொகைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பட்ட இடத்தில் 6 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் வசிப்பவர்கள் இயல்பான குடிமகனாக கருதப்பட்டு பதிவேட்டில் இடம் பெறுவர். இதில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தப்போவதில்லை என மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்கள் ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கொந்தளிப்பு அடங்காமல் போராட்டம் நீடித்துவரும் நிலையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!