தாய்ப்பாலை தானம் கொடுத்து குழந்தைகளைக் காப்பாற்றிய தாய்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒரு தாய் 12 லிட்டர் தாய்ப்பாலை தொடர்ந்து 3 மாதங்கள் வரை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து அந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம் தாய் ருஷினா மர்ஃபாஷியா கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வியான் என்னும் ஆண் குழந்தைக்குத் தாயானார். தன் குழந்தையின் தேவை போக, அவருக்கு தாய்ப்பால் அதிகம் சுரந்ததால் அதை வீணாக்காமல் தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்க முடிவெடுத்தார். ,அருகில் இருந்த மருத்துவமனையில் ஐசியுவில் இருந்த 5 பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கினார்். இவ்வாறு தொடர்ந்து 3 மாதங்கள் சுமார் 12 லிட்டர் தாய்ப்பாலை வழங்கி, 5 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார் ருஷினா.

இதனைத் தொடர்ந்து அக்குழந்தைகளின் தாய்மார்கள் அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். மாம் என்ற அமைப்பில் உள்ள இளம் தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பாலை தானமாக அளித்து வருகின்றனர். அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்த அமைப்பில், 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!