போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் புனீத் அகர்வாலுக்கு இந்தூரின் படல்பானி பகுதியில் மின்தூக்கி யுடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இந்த மின்தூக்கி 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் கொல்லப்பட்டனர்.
புனீத் அகர்வால் தனது குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் மின்தூக்கியில் ஏறி கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து வெளி அழகை ரசித்தார். பின்னர் கீழே இறங்கியபோது மின்தூக்கி பழுதாகி 70 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் புனீத் அகர்வால், 53, அவரது மகள் பாலக் அகர்வால், 27, மருமகன் பால்கேஷ் அகர்வால், 28, பேரன் நாவ், 2, உறவினர்கள் கௌரவ், 40, ஆர்யவீர், 11, ஆகியோர் உயிரிழந்தனர். புனீத் அகர்வாலின் மனைவி நிதி அகர்வால் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அகர்வாலின் மகன் நிபூன் கோபுரத்திலேயே நின்றுவிட்டதால் விபத்தில் இருந்து தப்பிவிட்டார். விசாரணை தொடர்கிறது.
மின்தூக்கி விழுந்ததில் அறுவர் பலி
3 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jan 2020 10:33

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!