டெல்லி தேர்தல்: ஜோதிடர்களை முற்றுகையிடும் அரசியல் பிரமுகர்கள்

புதுடெல்லி: டெல்லியில் மிக விரைவில் சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் பிரமுகர்கள் ஜோதிடர்களை நாடிச்செல்லத் துவங்கி உள்ளனர். இதையடுத்து ஜோதிடர்களின் மவுசு அதிகரித்துள்ளது.

டெல்லியின் வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரக்கூடும்.

டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. தங்களால் மீண்டும் வெற்றி பெற முடியும் என முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் பிரமுகர்கள் ஜோதிடர்களை வலம் வருகிறார்கள்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமா? அவ்வாறு கிடைத்தாலும் வெற்றி பெற முடியுமா? எனும் கேள்விகளுக்கு விடை கேட்டு தங்களது ஜாதகங்களுடன் ஜோதிடர்களைச் சந்தித்து வருகிறார்கள்.

ஒருசிலர் ஜோதிடர்களின் அறிவுரைப்படி சிறப்புப் பூசைகள் நடத்தவும், குறுகிய கால ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவும் தயாராகி வருவதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!