பங்ளாதே‌ஷை சேர்ந்தவர்களுக்கு டெல்லி வன்முறையில் தொடர்பு

புதுடெல்லி: அண்மையில் டெல்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணையில் இது அம்பலமானது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லியில் அவ்வப்போது திடீர் போராட்டங்கள் வெடிக்கின்றன.

இந்நிலையில் அண்மைய வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. சீமாபுரி பகுதியில் நடந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்களால் போலிசார் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அச்சமயம் போலிசார் மீது பெட்ரோல் குண்டுகளும் கற்களும் சரமாரியாக வீசப்பட்டன.

கலவரம் வெடித்த சில நிமிடங்களிலேயே போலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கடந்த சில தினங்களாக நடந்த விசாரணையில், டெல்லி வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இருந்த 15 பங்ளாதேஷிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என்றனர்.

மேலும் பல பங்ளாதேஷிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!