உ.பி: சுவர் இடிந்து விழுந்து 6 பேர் மரணம்

லக்னோ: கல்குவாரிக்காக புதிதாக கட்டப்பட்டு வந்த பெரிய சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்தது.

அங்குள்ள லட்சுமன்புரா கிராமத்தில் அந்த கல்குவாரி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்ட சுவரின் வெளிப்

பகுதியில் தொழிலாளர்கள் சிலர் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென அந்தச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுவர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி தொழிலாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

சுனிதா என்ற பெண்ணும் அவரது இரண்டு வயது மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார், உள்ளூர் மக்களின் உதவியோடு காயமடைந்தவர்களை மருத்துவ

மனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.

சுவர் கட்டும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் தரமான பொருட்களைப் பயன்படுத்தாததே சுவர் இடிந்து விழக் காரணம் என பாதிக்கப்பட்டோர் புகார் எழுப்பியுள்ளனர். இதையடுத்து அவர் மீதும் கல்குவாரி உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!