குருத்வாரா தாக்குதல்: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் இடைக்காலத் தலைவி சோனியா தெரிவித்துள்ளார்.

அங்குள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

“சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க இந்திய அரசு உரிய வகையில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவேண்டும்,” என்றும் சோனியா காந்தி மேலும் வலியுறுத்தி உள்ளார்.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தார். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

இதன் மீது அண்மையில் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அந்நேரம் அக்குருத்வாராவுக்கு வந்த சீக்கிய யாத்திரிகர்கள் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும் தெரிகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!