தலைநகர் குறித்த ஜெகன்மோகனின் முடிவு முட்டாள்தனமானது என்கிறார் சந்திரபாபு

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றுவதற்கான அதிகாரத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் அளிக்கவில்லை என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது ஒரு முட்டாள்தனமான முடிவு என்றும் இதற்குரிய விலையை முதல்வர் ஜெகன்மோகன் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆட்சிக் காலத்தில் அமராவதியை ஆந்திராவின் புதிய தலைநகராக உருவாக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் சந்திரபாபு நாயுடு.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இத்திட்டத்தைக் கைவிட்டுள்ளார் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன்.

இதனால் தனது கனவு சிதறிப் போய்விட்டது என்று சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருப்பதால் தலைநகரை மாற்றுவதற்கான அதிகாரம் நடப்பு முதல்வருக்குக் கிடைத்துவிட்டதாகக் கருதக்கூடாது.

“எங்களிடம் அதிகாரம் இருந்ததால் அமராவதியைத் தலைநகராகத் தேர்வு செய்யவில்லை.

“பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே அமராவதியைத் தேர்வு செய்தோம். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஏனெனில் இது பல்வேறு தரப்பினரும் சேர்ந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.

“நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு நதிகளில் இருந்து புனித நீரும் புனித மண்ணும் சேகரிக்கப்பட்டு அமராவதிக்குக் கொண்டு வரப்பட்டன.

“இந்நிலையில் அந்த முடிவில் இருந்து எப்படி திடீரென பின்வாங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

“முதல்வர் ஜெகன்மோகன் உங்களைத் தனிப்பட்ட வகையில் பழிவாங்குகிறாரா?,” என்ற கேள்விக்குப் பதிலளித்த சந்திரபாபு நாயுடு, “என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களைத் தண்டிப்பது ஏன்?,” என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!