கர்நாடகாவின் ரெய்ச்சூர் மாவட்டம், லிங்கசுகூரு பட்டணப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரசன்ன குமாரி என்பவர் பணியாற்றி வருகிறார்.
அனுஸ்ரீ என்ற 7வது படிக்கும் மாணவி வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக அவரின் உடலில் 40 முறை ஆசிரியை குண்டூசியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலதிகாரி சோதனையில் இது உறுதிபட தெரியவந்ததை அடுத்து, அதிகாரியின் பரிந்துரையின் பேரில் பிரசன்ன குமாரியைப் பணியிலிருந்து பள்ளி நிர்வாகம் நீக்கிவிட்டது.
#தமிழ்முரசு