கணவர் பல் துலக்குவதில்லை என மனைவி மணவிலக்கு மனு

தன் கணவர் பல் துலக்குவதுகூட கிடையாது என்று சொல்லி ஒரு மாது மணவிலக்குக் கேட்டு மனு செய்து இருக்கிறார்.

பீகாரில் உள்ள வைஷாலி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த சோனி தேவி என்பவருக்கும் மணிஷ் ராம் என்பவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்து இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு நாள் கூட தன்னுடைய கணவர் ஒழுங்காகக் குளித்ததில்லை, பல் துலக்கியதில்லை என்று தன்னுடைய மணவிலக்கு மனுவில் அந்த மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.

பீகார் மாநில பெண்கள் ஆணையத்தில் அந்த மணவிலக்கு மனுத் தாக்கலாகி இருக்கிறது. தன் கணவர் சவரம் கூட செய்வதில்லை என்றும் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தன் கணவருக்கு அறவே தெரியவில்லை என்றும் மனுவில் மனைவி புகார் தெரிவித்து உள்ளார்.

மனுவை விசாரித்த ஆணையம், கணவர்-மனைவி இருவரிடமும் விளக்கம் கேட்டு உள்ளது. 60 நாட்களில் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கணவரிடம் ஆணையம் வலியுறுத்திக் கூறி இருக்கிறது.

#தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!