புதுடெல்லி: புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
அவர்கள் “இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை” என்ற பெயரில் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் குழுவின் உறுப்பினர்கள் என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. அவர்களில் 12 பேர் எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள 37 பேரிடமிருந்தும் வாக்குமூலம் பெற விசாரணைக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வாட்ஸ்அப் குழுவில் இடம்பெற்றிருந்த மாணவர் அல்லாத 10 பேர் தேடப்பட்டு வருவதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ஏபிவிபி அமைப்பின் செயலாளர் மணிஷ் ஜான்கிட் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் நடத்தப் பட்ட தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ் உள்ளிட்ட பலரும் படுகாயம் அடைந்தனர்.