குடியுரிமைச் சட்டம்; கேரள அரசு வழக்கு

புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக கேரள மாநில அரசு அதற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25வது பிரிவுகளை மீறுவதாகவும் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நாட்டைப் பிளவுபடுத்துவதாகவும் கேரளா அரசு கூறியுள்ளது.

2014 டிசம்பா் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்துவா்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

கேரளாவில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒன்றிணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து வருகின்றன.

மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!