கடல்சார் ஒருங்கிணைப்பு மையம்: இலங்கை விருப்பம்

புதுடெல்லி: தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதை எதிர்கொள்ள இந்தியாவிடம் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பையும், கடல்சார் தொடர்புகளை விரிவுபடுத்தவும் இலங்கை கோரியுள்ளது. இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையில் கால்பதித்துள்ளது சீனா. அங்கு துறைமுக கட்டுமானம், விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. இதே போல் மாலத்தீவிலும் கால்பதித்துள்ளது சீனா.

இந்நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த சனிக்கிழமையன்று இலங்கையின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது கடல்சார் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றை அமைப்பது குறித்து இருதரப்பும் ஆலோசித்ததாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து.

எனினும் அந்த மையம் குறித்து மேலதிக தகவல்கள் ஏதுமில்லை. அதேசமயம் தெற்காசிய வட்டாரத்தில் உள்ள சில நாடுகள் பார்வையாளராக சேர்த்துக் கொள்ளப்படும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்குவது குறித்தும் இருதரப்பும் ஆலோசனை நடத்தியதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அதிபர் கோத்தபாய இந்தியாவுக்கு வருகை புரிந்தபோது இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என இந்தியா அறிவித்தது. இந்நிலையில் இரு நாடுகளும் ராணுவ ரீதியில் இணக்கமாகச் செயல்பட முன்வந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!