மும்பை: மகாராஷ்டிராவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் அங்குள்ள காடுகள் அனைத்தையும் பாதுகாப்பானதாக மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
அது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின் அமைச்சர் ஆதித்ய தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர காடுகளில் பாதுகாப்பை அதிகரித்து காட்டுவளங்களை சுற்றுலாப்பயணிகள் அச்சமின்றி சுற்றிப் பார்க்கும் வகையில் மேம்படுத்த வேண்டும்.
அதேபோல் தேசிய பூங்காக்கள், பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட வளங்களையும் மேம்படுத்த வேண்டும். இதற்கான பணியில் காட்டுவளத் துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயல்படும் வகையில் குழு ஒன்று அமைக்கப்படுவதாக அமைச்சர் ஆதித்ய தாக்கரே கூறினார். இந்தக் குழுவில் சுற்றுலா மற்றும் காட்டுவளத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
சுற்றுலா நிலையங்களுக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் அவற்றை வலுப்படுத்த முடியும் என்று அமைச்சர் ஆதித்ய கூறினார்.