புதுடெல்லி: இந்தியாவுக்கும் நேப்பாளத்திற்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் உதவியுடன் ஜோக்பானி மற்றும் பிராட்நகருக்கு இடையே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை இருநாட்டு பிரதமர்களும் டெல்லியில் நடந்த நிகழ்வில் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நட்பான அண்டை நாடுகளுடனான போக்குவரத்தை எளிமைப்படுத்த தமது அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வணிகம், கலை மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட உறுதி அளித்தார்.
பின்னர் பேசிய நேப்பாளப் பிரதமர், இந்தியாவுடன் இணைந்து செயல்பட நேப்பாளம் தயாராக உள்ளது எனக் கூறினார்.