வாளேந்தி, குதிரையில் சென்று மாப்பிள்ளைகளை அழைத்து வந்த மணப்பெண்கள்

போபால்: வழக்கமாக திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைதான் குதிரையில் வருவார். மாறாக மணப்பெண்கள் கையில் வாளேந்தி, குதிரையில் சென்று மணமகன்களை அழைத்து வந்து மணமுடித்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

அனந்த் மாவட்டத்தில் கடந்த புதன்கிாமை நடந்தேறிய புதுமையான திருமண ஊர்வலத்தில் சாக்ஷி, கிருஷ்டி என்ற மணப்பெண்கள், குதிரைகளில் தங்கள் மாப்பிள்ளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பாட்டிதர் சமுதாயத்தின் பாரம்பரியத்தின்படி நடைபெற்ற திருமணத்தில் மேலும் பல புதுமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கைத்தறித் துணியில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நிழல்தரும் மரக்கன்றுகளும் மருத்துவ மூலிகைச்செடிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இவற்றில் முக்கியமாக வேம்பு, துளசி ஆகியவை இடம் பெற்றிருந்தன. ஆணுக்குப் பெண் சமம் என்று கூறப்படும் இன்றைய சமுதாயத்தில் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டுமென இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டதாக ஒரு மணமகளின் தந்தை கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!