தூங்கா நகரமாகிறது மும்பை

தூங்கா நகரமாகிறது மும்பை

1 mins read

மும்பை: குடியரசு தினத்திற்கு அடுத்த நாளான 27ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்துவைக்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குடியிருப்பு அல்லாத பகுதிகளின் வணிக, ஆலை வளாகங்களிலுள்ள கடைகள், உணவகங்கள், திரையரங்குகள் இரவு முழுவதும் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றார்.