லண்டன்: இந்தியாவை பெரும் பொருளியல் ஆபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிக்கவைத்துள்ளதாக லண்டனைச் சேர்ந்த ‘இக்கனாமிஸ்ட்’ பொருளியல் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அச்சஞ்சிகை அண்மையில் வெளியிட்டுள்ள கட்டுரையில், தடுப்புக்கம்பிகளில் தாமரை மலர்ந்திருப்பது போன்ற கேலிச்சித்திரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை பிரதமர் மோடி பொருளியல் ரீதியாக மேம்படுத்தத் தவறிவிட்டதாகவும் சரியான திட்டமிடல் இல்லாத பொருளியல் கொள்கைகளால் அந்நாடு பெரும் பொருளியல் ஆபத்தைச் சந்தித்து வருவதாகவும் அந்தக் கட்டுரையில் முக்கிய மாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.