தமிழகம், புதுச்சேரி வருமான வரி வசூல் 68% கூடியது

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் வசூலிக்கப்பட்ட வருமான வரித் தொகை 68 விழுக்காடு கூடி இருக்கிறது.

கடந்த 2014 முதல் 2019 வரை இந்த அதிகரிப்பு இடம்பெற்று இருக்கிறது என்று சென்னை வருமான வரி தலைமை ஆணையர் அனு ஜே சிங் தெரிவித்தார்.

இந்தத் துறையின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அதே காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் 80 விழுக்காடு கூடி இருப்பதாகக் கூறினார்.

நியாயமான வரிக் கொள்கைகளைக் கடைப்பிடித்து, வரி உயர்வு இருந்தால் அதைப் படிப்படியாக அமல்படுத்தி, தொழில்நுட்பங்களை நவீனமாக்கி, மக்கள் தாங்களே முன்வந்து வரிசெலுத்துவதை எளிதாக்கி இவற்றின் வழி நாட்டு உருவாக்கத்தில் பங்கு கொள்வதே தனது துறையின் இலக்கு என்றாரவர்.

பொதுவாகப் பார்க்கையில் தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் வசூலிக்கப்பட்ட வருமான வரித் தொகையில் இடம்பெற்று இருக்கும் அதிகரிப்பு கணிசமானதாக இருக்கிறது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஆணையர் மேலும் தெரி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!