மணமகளை கடத்தி மதமாற்றம் செய்து கட்டாய திருமணம்

அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண மண்டபத்தில் இருந்து கடத்தப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்து, பின்னர் முஸ்லிம் நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பின் பொது செயலர் ரவி தவானி கூறும்போது, “கடந்த 15ஆம் தேதி சிந்து மாகாணத்தின் மதியாரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி திருமணத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், கராச்சியில் ஷாருக் மேமன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

“புகாரின் பேரில் போலிசார் கராச்சி சென்று, சிறுமியை மீட்டு வந்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தினர்.

“கடந்த இரண்டு வாரங்களில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்படுவது இது மூன்றாவது சம்பவம். மிர்புர் காஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிமாக மாற்றப்பட்டார். பின்னர் குலாம் முஸ்தபா என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார்,” என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!