10ஆம் வகுப்பு வரை மராட்டிய மொழி கட்டாயம்

மும்பை: மகாரா‌ஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக அனைத்துப் பள்ளிகளிலும் மராட்டிய மொழியைக் கட்டாயமாக்க மகாரா‌ஷ்டிர மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. சட்டமன்ற வரவுசெலவு திட்டக் கூட்டத்தொடர் வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது.

அப்போது இது தொடர்பான சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளதாக மாநில தொழில்துறை மற்றும் மராட்டிய மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அவர் “மகாரா‌ஷ்டிர மாநிலத்தில் மராட்டிய மொழிப் பாடத்தைக் கற்றுக்கொடுக்காத 25,000 பள்ளிகள் உள்ளன.

இந்தப் பள்ளிகளில் மராட்டிய மொழி விருப்பப்பாடமாகக்கூடக் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை.

மகாரா‌ஷ்டிர மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மராட்டிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவது இனி கட்டாயமாக்கப்படும். வரவுசெலவு திட்டக் கூட்டத்தொடரில் மராட்டிய மொழியைப் பள்ளிகளில் கட்டாயமாக்கும் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

வெகுவிரைவில் இந்த சட்ட முன்வரைவு தாக்கல்செய்யப்பட்டு அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மராட்டிய மொழிப் பாடம் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் சுபா‌ஷ் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!