கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலை கோரி போராட்டம்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் கன்னட அமைப்புகள் நேற்று மாபெரும் போராட்டம் நடத்தின. அதனையடுத்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகளும் கடைத்தொகுதிகளும் மூடப்பட்டிருந்தன.

தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஏறக்குறைய 700க்கு மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. போராட்டக்காரர்கள் மாநிலத்தின் பல இடங்களில் மாபெரும் ஊர்வலமாகச் சென்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.

வன்முறையைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டதோடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!